ஆப்நகரம்

லாக்டவுனில் விஜய் பார்த்த வெப் சீரிஸ் எது தெரியுமா?

நடிகர் விஜய் இந்த கொரோனா லாக் டவுனில் money heist வெப் சீரிஸை பார்த்து முடித்துள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 2:51 pm
கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவத் துவங்கிய போது நாடு முழுவதும் பொது முடக்கத்தை அரசு அறிவித்தது. அப்போது முதல் சினிமா துறையும் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில் தான் இருந்து வருகிறது. சினிமா ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில், தியேட்டர்களும் அப்போது இருந்து மூடப்பட்டு தான் இருக்கின்றது.
Samayam Tamil Vijay


சினிமா நட்சத்திரங்கள் இந்த காரணத்தினால் தங்கள் வீடுகளிலேயே தான் ஐந்து மாதங்களாக இருந்து வருகிறார்கள். மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுக்குக் கூட இது கட்டாய ஓய்வாக அமைந்துவிட்டது. பிரபலங்கள் பலரும் இந்த லாக் டவுன் நேரத்தில் தங்களுக்கு பிடித்த பல விஷயங்களை வீட்டிலேயே செய்து வருகிறார்கள். அதன் புகைப்படங்களை வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பதிவிட்டு வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் நடிகர் தளபதி விஜய் இந்த நேரத்தை எப்படி செலவிட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் இந்த நேரத்தை பயன்படுத்தி தான் இதுவரை பார்க்காத பல படங்களை ஓடிடி தளங்களில் பார்த்து இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் தளத்தில் அவர் Money Heist என்ற வெப் சீரிஸை முழுமையாக பார்த்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களையும் அவர் பார்த்திருக்கிறார். இந்த கொரோனா காலகட்டத்தில் விஜய் வெளியிடங்களுக்கு எங்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பனையூரில் இருக்கும் அவரது வீட்டிலேயே தன் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்திற்கு அவர் சென்று வந்திருக்கிறார்.

சமீபத்தில் தனது வீட்டில் விஜய் மரக்கன்று நடும் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வைத்த கோரிக்கையை ஏற்று தான் விஜய் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது பார்த்து இருக்கும் Money Heist சீரிஸின் இயக்குனர் அலெக்ஸ் ரோட்ரிகோ அளித்திருந்த பேட்டியில், இந்த தொடரில் வரும் ப்ரொபசர் கதாபாத்திரத்திற்கு தளபதி விஜய் பொருத்தமாக இருப்பார் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவர் அப்படி கூறி இருந்தார். அந்த சமயத்தில் அது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கும் என்று தான் தயாரிப்பாளர் காத்துக்கொண்டு இருக்கிறார். அதை பொறுத்துதான் இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். கொரோனா பயத்தில் இருக்கும் மக்கள் மீண்டும் தியேட்டருக்கு வர வைக்க மாஸ்டர் படத்தினால் தான் முடியும் என சினிமா துறை பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து இருக்கிறார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

எஸ்பிபி-யை அடுத்து குஷ்புவுக்காக பிராத்தனை செய்யும் ரசிகர்கள

அடுத்த செய்தி

டிரெண்டிங்