ஆப்நகரம்

ஒய்வெடுக்க குடும்பத்துடன் லண்டன் சென்ற விஜய்!

நடிகர் விஜய் தன் குடும்பத்துடன் ஓய்வெடுக்க லண்டன் சென்றுள்ளார்.

TNN 9 Dec 2016, 6:35 pm
நடிகர் விஜய் பரதன் இயக்கத்தில் கடைசியாக நடித்த படம் ‘பைரவா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை படம் போன்று சிட்டி, வில்லேஜ் என இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளாராம்.
Samayam Tamil vijay went to london with his family for rest after complete bairavaa movie
ஒய்வெடுக்க குடும்பத்துடன் லண்டன் சென்ற விஜய்!


பைரவா’படத்தை விரைவாக முடித்து பொங்கலுக்கு வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. மேலும், இந்த படத்தில் விஜய், மாறுபட்ட இரு கேரக்டரில் தன்னை வெளிப்படுத்தியிருப்பது போன்று டப்பிங்கிலும் கிராமத்து ரோலில் எளிமையாகவும், நகரத்து ரோலில் சற்று கம்பீரமாகவும் வித்தியாசப்படுத்தி பேசியிருக்கிறாராம்.

படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதற்கு முன் இம்மாதம் 17ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. விஜய் தனது ஒவ்வொரு படம் முடிந்தவுடன் ஓய்வெடுப்பதற்காக ஏதாவத ஒரு நாட்டுக்குச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது ‘பைரவா’ படத்தை முடித்த கையோடு தனது குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Vijay went to London with his family for rest after complete bairavaa movie

அடுத்த செய்தி

டிரெண்டிங்