ஆப்நகரம்

அப்பாவின் கண்களை கையில் டாட்டூவாக வரைந்த சண்முகப்பாண்டியன்!

நடிகர் விஜயகாந்த்தின் மகன், சண்முகப்பாண்டியன், விஜயகாந்த்தின் கண்களை தன்னுடைய கையில் டாட்டூவாக வரைந்துள்ளார்.

Samayam Tamil 17 Apr 2018, 2:38 pm
நடிகர் விஜயகாந்த்தின் மகன், சண்முகப்பாண்டியன், விஜயகாந்த்தின் கண்களை தன்னுடைய கையில் டாட்டூவாக வரைந்துள்ளார்.
Samayam Tamil அப்பாவின் கண்களை கையில் டாட்டூவாக வரைந்த சண்முகப்பாண்டியன்!
அப்பாவின் கண்களை கையில் டாட்டூவாக வரைந்த சண்முகப்பாண்டியன்!


நடிகர் விஜயகாந்த் சினிமாவில் தனது 40 ஆண்டு காலத்தை நிறைவு செய்துவிட்டார். அதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது கட்சி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல முன்னனணி நட்சத்திரங்கள், முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்தனர். ஆனால் அவரது மகன் சண்முகபாண்டியன் லண்டனில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் லண்டனிலிருந்து ஒரு வீடியோ மூலம் தனது அப்பாவுக்கு சண்முகப் பாண்டியன் வாழ்த்து அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சண்முகப்பாண்டியன், விஜயகாந்த் கண்களை டாட்டூவாக அவரது கையில் வரைந்துள்ளார். இது பற்றி சண்முகப்பாண்டியன் கூறுகையில், ‘‘என் அப்பாவுக்கு முதலில் வாழ்த்துக்கள், தமிழில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் நான் இருக்கும் வரை என் அப்பா என்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக என் அப்பாவின் கண்களை என் கையில் டாட்டூவாக வரைந்துள்ளேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்