ஆப்நகரம்

கீழே கிடந்த செருப்பை எடுத்து ரசிகரிடம் கொடுத்த விஜய்: சவுந்தரராஜா பாராட்டு

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றபோது ரசிகர் ஒருவரின் செருப்பை எடுத்து அவரிடம் கொடுத்த விஜய்யை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சவுந்தரராஜாவும் அவரை பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 27 Sep 2020, 12:23 pm
கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்து வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் உடல் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
Samayam Tamil vijay


இறுதிச் சடங்கு துவங்கி நடந்து கொண்டிருந்தபோது திடீர் என்று விஜய் வந்து அஞ்சலி செலுத்தினார். மாஸ்க் அணிந்து வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் கவலையிலும் சந்தோஷப்பட்டனர். விஜய் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றபோது அவரை பார்க்க ரசிகர்கள் முந்தியடித்தார்கள். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் விட்டனர்.

அப்பொழுது ரசிகர்கள் முந்தியடித்ததில் ஒருவரின் செருப்பு கழன்று விழுந்தது. இதை பார்த்த விஜய் அந்த செருப்பை எடுத்து ரசிகரிடம் கொடுத்துவிட்டு சென்றார். ஒரு ரசிகரின் செருப்பை விஜய் எடுத்துக் கொடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.

விஜய் மீதான மரியாதை அதிகரித்துள்ளதாக சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தான் எங்கள் விஜய்ணா என்று ரசிகர்கள் பெருமையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் பற்றி சவுந்தரராஜா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தளபதி... தளபதி தான். விஜய் அண்ணா சிறந்த மனிதர். எஸ்.பி.பி.க்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் தன் ரசிகருக்கும் உதவி செய்துள்ளார் என்று நெகிழ்ந்து போயிருக்கிறார்.

Vijay எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த விஜய் வாந்தாரே, 'அவர்' வந்தாரா?: பஞ்சாயத்தை கூட்டிய ரசிகர்கள்

இதற்கிடையே விஜய் ரசிகர்கள் சிலரோ, ரஜினிகாந்த் ஏன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்