ஆப்நகரம்

பிடிக்காதவங்க கல் எரிவாங்க.. மாஸ்டர் விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Samayam Tamil 16 Mar 2020, 8:49 am
விஜய் வழக்கமாக தன் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ஒரு குட்டி கதை சொல்வார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
Samayam Tamil Master vijay kutti story at audio launch


நேற்று நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிலும் அப்படி ஒரு குட்டி கதையை விஜய் கூறினார்.

"இது கதைனு சொல்ல முடியாது. நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். என் படத்துலயே ஒரு பாட்டு ஒன்னு இருக்கு. எல்லாரும் கேட்டிருப்பீர்கள். 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதி போலே ஓடிக்கொண்டு இரு' கேட்டிருப்பீங்க. கிட்டத்தட்ட நம்ம எல்லாரையோட வாழ்க்கையும் நதி போல தான்."

"ஒரு நதி ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருக்கும். ஒரு இடத்தில் மக்கள் சிலர் விளக்கை ஏற்றி வைத்து வணங்குவார்கள். நதி போய்கிட்டே இருக்கும். பிடிக்காத சிலர் கல் எரித்து விளையாடுவார்கள். அப்பாவும் நதி போய்க்கொண்டே தான் இருக்கும். நாம் நம் வேலையை செம்மையை செய்துட்டு நதி மாதிரி போய்க்கொண்டே இருக்கனும்."

"இந்த பாடல் வரி போலத்தான்.. Life is very short நண்பா. Always be happy. அவ்ளோதாங்க. Kill them with your success. Bury them with your smile" என கூறி தன் குட்டி கதையை முடித்தார் விஜய்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்