ஆப்நகரம்

அது ஏன் விஜய்க்குன்னே இப்படி தொடர்ந்து நடக்குது?

விஜய் படம் பிரச்சனை இல்லாமல் ரிலீஸானால் தான் அது அதிசயம் என்கிற நிலைமை ஆகிவிட்டது.

Samayam Tamil 18 Oct 2019, 8:51 am
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது.
Samayam Tamil vijay


இந்நிலையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி இயக்குநர் கே.பி. செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுதேதி குறிப்பிடாமல் அதை ஒத்தி வைத்துள்ளது.

விஜய் படங்கள் ரிலீஸுக்கு முன்பு பிரச்சனையில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்தே விஜய் படங்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றன.

2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை மோசமாக காட்டியதாகக் கூறி அப்படத்திற்கான யு சான்றை வாபஸ் பெற உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அய்யோ, சுறா, குருவி, புலி எல்லாம் ஞாபகம் வருதே: லைட்டா கவலையில் விஜய் 'பிகில்' ரசிகர்கள்

பின்னர் 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் தனது தந்தை மற்றும் தாத்தாவின் வாழ்க்கையை காண்பித்துள்ளதாகக் கூறி எஸ்.ஆர்.கே. கண்ணன் வழக்கு தொடர்ந்தார்.

2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி படத்தை முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொடர்புடைய நிறுவனம் தயாரித்ததாகக் கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று கூறி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து படம் ரிலீஸான மறுநாளே அதை தொடர்ந்து திரையிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

புதிய சாதனை படைத்த பிகில் டிரைலர்!

கடந்த ஆண்டு வெளியான சர்கார் படத்தில் தமிழக அரசை விமர்சித்ததாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கதை திருட்டு பிரச்சனையும் ஏற்பட்டது. இந்நிலையில் பிகில் படமும் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்