ஆப்நகரம்

ரசிகனின் செருப்பை எடுத்து கொடுத்த விஜய்: நெகிழ்ச்சியான ரசிகர்கள்

எஸ்பிபி க்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது கூட்ட நெரிசலில் விஜய் சிக்கினார். போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது ரசிகர் ஒருவரின் செருப்பை விஜய் கையில் எடுத்து கொடுத்திக்கும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 4:20 pm
உடல்நலக்குறைவால் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றது. சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானவர்கள் அஞ்சலி செலுத்த நேரில் வருவதை தவிர்த்த நிலையில் விஜய் கடைசி நேரத்தில் வந்து எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மகன் எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
Samayam Tamil Vijay


விஜய் வருகிறார் என்றால் எவ்வளவு கூட்டம் கூடும் என தெரியும். அதிகம் பேர் அவரை சுற்றி வந்துவிட்டனர். அதனால் போலீசார் அவருக்கு பாதுகாப்பாக சுற்றி வளையம் போல நின்று அவரை பத்திரமாக காருக்கு அழைத்து சென்றனர்.

விஜய்யை பார்ப்பதற்கு அதிக அளவில் ரசிகர்கள் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் தவறி கீழேவும் விழுந்திருக்கிறார்கள். ரசிகர் ஒருவரது செருப்பும் தவறி விழுந்திருக்கிறது. விஜய் சற்றும் யோசிக்காமல் அதை கையில் எடுத்து கொடுத்திருக்கிறார். அதை வீடியோவில் பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் பலரும் அவரை பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள்.



மேலும் இவ்வளவு கூட்டம் இருக்கும் என தெரிந்தும் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி இருப்பது பெரிய விஷயம் என பாடலாசிரியர் விவேக் கூறி இருக்கிறார். "நன்றி சார். இந்த தலைமுறையின் சிறந்த கலைஞருக்கு நீங்க செய்தது பார்த்து உங்கள் மீது அதிக மரியாதை வந்து இருக்கிறது" என விஜய்யை அவர் பாராட்டி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்