ஆப்நகரம்

கனடாவில் சிக்கிய மகனை நினைத்து விஜய் கவலையில் எல்லாம் இல்லையாம்ணா

கொரோனா பிரச்சனை உள்ள நிலையில் கனடாவில் சிக்கிக் கொண்ட மகனை நினைத்து விஜய் கவலையில் இருப்பதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 16 Apr 2020, 12:29 pm
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
Samayam Tamil vijay


விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த இக்கட்டான சூழலில் அவர் கனடாவில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் கனடாவில் இருக்கும் மகனின் பாதுகாப்பை நினைத்து விஜய் கவலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

நிஜத்தில் விஜய் கவலையில் எல்லாம் இல்லையாம். சஞ்சய் கனடாவில் இருந்தாலும் பாதுகாப்பாக இருக்கிறாராம். அதனால் மகனை நினைத்து விஜய் கவலைப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அன்றாடம் உழைத்து சாப்பிடும் சினிமா தொழிலாளர்கள் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளதுடன், அரிசி, பருப்பு, காய்கறிகள் கொடுத்தும் உதவி செய்கிறார்கள்.

காதல்னா இது காதல்: விஜய்யின் காதலுக்கு மரியாதையை டிரெண்டாக்கும் ரசிகாஸ்

இந்நிலையில் விஜய் மட்டும் ஏன் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. விஜய் உதவி செய்வாரா, மாட்டாரா என்று வாரக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்