ஆப்நகரம்

புறநானூற்று பாடல் வரியை பட தலைப்பாக மாற்றிய விஜய் சேதுபதி!

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது

Samayam Tamil 1 Nov 2019, 11:56 am
கோலிவுட்டில் ஒரு வருடத்திற்கு 8 முதல் 10 படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என்று தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
Samayam Tamil 65706059


இவரது நடிப்பில் உருவாகியுள்ள சங்க தமிழன் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி தற்போது வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை அப்படத்தை தயாரிக்கிறது.

இது என்னடா பிகிலுக்கு வந்த சோதனை? வெறிச்சோடி காணப்பட்ட பிரபல திரையரங்கம்!

மேலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வரி கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் இடம் பெற்ற வாக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார் . நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இதில் மகிழ் திருமேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


விஜய் சேதுபதி தற்போது ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் வில்லன், தெலுங்கு படங்கள், அல்லு அர்ஜுனுக்கு வில்லன் என்று பிஸியாக நடிக்கிறார்.

ShahRukh Khan: விஜய்க்கு ’பிகில்’னா ஷாருக்கானுக்கு சங்கி – டிரெண்டாகும் அட்லியின் பட டைட்டில்!

இது தவிர மணிரத்தினம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்