ஆப்நகரம்

Vikram: படப்பிடிப்பை தொடங்கிய விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’!

‘கடாரம் கொண்டான்’ படத்தை அடுத்து நடிகர் விக்ரம் தற்போது ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 11 Feb 2019, 4:07 pm
பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘மஹாவீர் கர்ணா’. இந்தப் படத்தில் ஹீரோவாக கர்ணன் கேரக்டரில் நடிகர் விக்ரம் நடிக்கிறார். இந்தப் படம் ரூ.300 கோடி செலவில் எடுக்கப்படவுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த பிரம்மாண்ட படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.
Samayam Tamil maxresdefault


இப்படத்தின் வசனங்களைப் பல எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அதில் தமிழ் வடிவத்துக்கான வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். விக்ரம் இல்லாத மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகளைப் படக்குழு இதுவரைப் படமாக்கி வந்தது. இந்நிலையில் கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்துள்ள விக்ரம் இப்போது கரணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் கூறுகையில், ‘‘தொடங்கியது மஹாவீர் கர்ணா. கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. தலைசிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது’’ என்றார் இயக்குனர் விமல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்