விக்ரம் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இது தவிர மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
'மகான்' படத்தில் முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக மகான் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சீயான் 61 படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' படம் வெளியானது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பலவித பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் பா. ரஞ்சித்.
இந்நிலையில் பா. ரஞ்சித்தும், விக்ரமும் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. அதே போல் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மகான், கோப்ரா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்படுகிறது.
'மகான்' படத்தில் முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக மகான் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சீயான் 61 படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' படம் வெளியானது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பலவித பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் பா. ரஞ்சித்.
இந்நிலையில் பா. ரஞ்சித்தும், விக்ரமும் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. அதே போல் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மகான், கோப்ரா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்படுகிறது.