ஆப்நகரம்

குழப்பத்தில் சியான் விக்ரம்!

தமிழ்நாட்டில் இருமுகன் படம் கொடுத்த வெற்றியில் இருக்கும் சியான் அடுத்து என்ன பண்ணுவது என்ற குழப்பத்தில் இருந்து வருகிறாராம்.

TNN 9 Oct 2016, 4:25 pm
இருமுகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில்வர் லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் கரிகாலன் படத்தில் நடிக்க இருந்தது. ஆனால், இப்படத்திற்கு சரியான கால்ஷீட் தராததால் இப்படம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இப்படத்திற்கு விக்ரம் கால்ஷீட் கொடுத்தும், கரிகாலன் படம் பற்றிய சரியான கதை இவருக்கு தெரியாதாம். மேலும், இப்படத்திற்கு ரூ.10 கோடிக்குள் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil vikrams confused state
குழப்பத்தில் சியான் விக்ரம்!


பிரம்மன் புகழ் சாக்ரடீஸ் இயக்கத்தில் விக்ரம் அடுத்த படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், இப்படத்தின் கதை விக்ரமுக்கு பிடிக்காததால், சேதுபதி இயக்குனரான அருண்குமாரை வைத்து இப்படத்தின் கதையை மாற்றியமைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

சில்வர் லைன் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் குறைவான பட்ஜெட் படமான கரிகாலன் தொடர்ந்து தாமதமாகி வருவதால், இயக்குனர் ஹரியின் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். மேலும், என்.லிங்குசாமி இயக்கத்தில் வந்த பீமா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Vikram confused state!

அடுத்த செய்தி

டிரெண்டிங்