ஆப்நகரம்

கிராமத்து நாயகன் முத்திரைக்கு பயப்படும் விமல்!

அதிகமாக கிராமத்து படங்களில் நடித்தால் கிராமத்து நாயகன் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என பயப்படுகிறார் நடிகர் விமல்.

TNN 3 Feb 2017, 4:59 pm
அதிகமாக கிராமத்து படங்களில் நடித்தால் கிராமத்து நாயகன் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என பயப்படுகிறார் நடிகர் விமல்.
Samayam Tamil vimal afraid to seal the village hero
கிராமத்து நாயகன் முத்திரைக்கு பயப்படும் விமல்!


பசங்க, களவானி, உள்பட கிராமத்து கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார் விமல். கிராமக்கதைகளை தவிர நகரப்புற கதைகள் கொண்ட படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து கிராமக் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நிலையில் ராமராஜன் போல், தனக்கு கிராம முத்திரை குத்திக் விடக் கூடாது என்பதில், பிடிவாதமாக இருந்தார் விமல்.

இதற்காக, நகர்ப்புறத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களில், நவநாகரிக இளைஞனாக நடித்தார். இப்படங்கள் இவருக்கு பெரிதும் ஹிட் கொடுக்கவில்லை. இதனால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என பயந்துபோன அவர், தற்போது, தனக்கான களம், கிராமத்து படங்களே என, முடிவெடுத்து விட்டார். தற்போது, ‘மன்னர் வகையறா’ என்ற காமெடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக, விமலுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் கயல் ஆனந்தி. பூபதி பாண்டியன் இயக்கும் இப்படத்தில் சாந்தினி தமிழரசன், சரண்யா பொன்வண்ணன், நாசர், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்