ஆப்நகரம்

தமிழில் டப்பாகி வெளியாகும் ராம் சரண் நடித்த தெலுங்கு படம்!

ராம் சரண் நடிப்பில் உருவான தெலுங்கு படம் ‘வினயை விதேயா ராமா’ என்ற படம் தற்போது தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 3:45 pm
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். தற்போது இவர் ‘வினயை விதேயா ராமா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கோயப்பட்டிசீனு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ‘பரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்த நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
Samayam Tamil ram-charan


ராம் சரணுக்கு வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த், நடிகை சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படம் காதல், கலகலப்பு, அரசியல், சென்டிமென்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ‘வினயை விதேயா ராமா’ பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்