ஆப்நகரம்

ரங்கஸ்தலத்திற்கு தடைவிதித்த விஷால்!

தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ படத்தை 8ம் தேதிக்கு மேல் திரையிடக்கூடாது என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 5:16 pm
தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ படத்தை 8ம் தேதிக்கு மேல் திரையிடக்கூடாது என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
Samayam Tamil Rangasthalam-vishal


தயாரிப்பாளர் சங்க பிரச்னையால் கடந்த ஒரு மாதமாக புதிய தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் புதிய படம் தொடங்குவதற்கான பூஜையும் போடப்படவில்லை. இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவான தெலுங்கு படமான ‘ரங்கஸ்தலம்’ வெளியானது. இந்தப் படம் வெளியானது சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பின் தியேட்டர்களின் கல்லாபெட்டி நிரம்பியது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தெலுங்கு திரைப்படங்கள் எதுவும் ஏப்ரல் 8-ம்தேதி ஞாயிறு முதல் தமிழ் நாட்டில் வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே ரிலீசாகி தமிழகத்தில் வெற்றி நடை போட்டு வரும் சமந்தாவின் ‘ரங்கஸ்தலா’ திரைப்படமும் ஞாயிறு முதல் திரையரங்குகளில் இருந்து தூக்கப்படும் என்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ‘ரங்கஸ்தலம்‘ படக்குழுவினர் மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்