ஆப்நகரம்

கதை டிஸ்கஷனில்தான் அனிஷாவுடன் நெருக்கமானேன்: நடிகர் விஷால்!

ஒரு படத்திற்காக கதை ஆலோசனையில் இருந்தபோதுதான் அனிஷாவுடன் எனக்கு காதல் மலர்ந்தது என பிரபல நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Feb 2019, 3:58 pm
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். மேலும் அவர் நடிகர் சங்க செயலாளர், தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார். அண்மையில் இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா நடத்தினார்.
Samayam Tamil vishal


இந்நிலையில் நடிகர் விஷால், அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என தகவல் வெளியானது. அனிஷா தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஷால் தன்னுள் எப்படி காதல் மலர்ந்தது என்பது பற்றி கூறியுள்ளார். அனிஷாவை தொழில் சம்பந்தமாகத்தான் அவர் சந்தித்தாராம். ஆனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என அப்போது நினைக்கவில்லை. தெரு நாய்களை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கவுள்ளேன். இப்படத்தின் கதையை அனிஷாவிடம் தான் முதலில் சொல்லிவிட்டு கருத்து கேட்டேன். படம் குறித்த விவாதத்தின் போது தான் நாங்கள் இருவரும் நெருக்கமானோம். இருவரும் காதலில் விழுந்தோம்.

நான் தான் முதலில் காதலை அனிஷாவிடம் கூறினேன். அவர் கடவுளால் எனக்காகவே அனுப்பப்பட்டவள் என நினைக்கிறேன்’’ என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்