ஆப்நகரம்

ஆதரவு இல்லாததால் ஸ்டிரைக்கை வாபஸ் பெற விஷால் முடிவு!

30ம் தேதி நடக்கவிருக்கும் ஸ்டிரைக்குக்கு போதிய ஆதரவு இல்லாததால் வாபஸ் பெற முடிவு செய்துள்ளார் நடிகர் விஷால்.

TNN 15 May 2017, 3:35 pm
30ம் தேதி நடக்கவிருக்கும் ஸ்டிரைக்குக்கு போதிய ஆதரவு இல்லாததால் வாபஸ் பெற முடிவு செய்துள்ளார் நடிகர் விஷால்.
Samayam Tamil vishal plan to withdraw his strike
ஆதரவு இல்லாததால் ஸ்டிரைக்கை வாபஸ் பெற விஷால் முடிவு!


நடிகர் விஷால் சினிமாவுக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் மனு கொடுத்தார். அந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால், வரும் 30ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என அறிவித்திருந்தார். இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் வேலை நிறுத்தத்திற்கு சினிமா சங்கங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் வெளிப்படையாகவே எதிர்க்க, மற்ற சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாம்.

இந்தத் தகவல் விஷால் காதுக்கு வர, ‘ஒரு கோரிக்கையையாவது உடனே நிறைவேற்றிக் கொடுங்க என்று நேற்று கூட தனது அணியிருடன் சேர்ந்து முதல்வரைச்சந்தித்துக் கேட்டுக் கொண்டாராம். மேலும் அந்தக் கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்ற வாய்ப்பில்லை, அத்துடன் ஸ்டிரைக்கில் ஈடுபட தியேட்டர் உரிமையாளர் தயாராக இல்லை. அதனால் அறிவித்த ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிவிடலாம் என நடிகர் விஷால் நினைக்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்