ஆப்நகரம்

தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்: சரத்குமார், ராதிகா கோரிக்கை!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வரும் நடிகர் விஷால் அவரது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 22 Dec 2018, 4:25 pm
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வரும் நடிகர் விஷால் அவரது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil vish


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது. கதவுக்கு பூட்டு, பூட்டு உடைப்பு, விஷால் கைது, வழக்கு, என தயாரிப்பாளர் சங்கம் முன்பு எப்போதும் சந்தித்திராத பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் விஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சரத்குமாரும், நடிகை ராதிகாவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடந்தது.இதில் விழாவில் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். பின்னர்நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘நான் சங்கத்தில் பதவி வகித்த போது என் மீது 150 கோடி வரை ஊழல் சொன்னார்கள். அதன்பிறகு 150 கோடி 3 லட்சமானது. இப்போது அதே குற்றச்சாட்டை அவர்கள் சந்திக்கிறார்கள். அதை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்றார் சரத்குமார்.

மேலும் ராதிகா சரத்குமார் கூறுகையில்: ‘‘விஷால் பொறுப்பேற்ற பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை கருத்தில் கொண்டு அறக்கட்டளை நிதியை எடுத்து சிறு தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுத்திருக்கிறார். அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்