ஆப்நகரம்

நடிகர் சங்கத் தேர்தலில் இந்தாண்டும் பாண்டவர் அணி வெற்றியை தக்க வைக்குமா?

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கிவிட்டது, மீண்டும் பாண்டவர் அணி தன்னுடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

Samayam Tamil 3 Feb 2018, 4:35 pm
நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கிவிட்டது, மீண்டும் பாண்டவர் அணி தன்னுடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
Samayam Tamil vishal team will retain its success in the actors association election
நடிகர் சங்கத் தேர்தலில் இந்தாண்டும் பாண்டவர் அணி வெற்றியை தக்க வைக்குமா?


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்லில் விஷாலின் பாண்டவர் அணி, வெற்றி பெற்றது. சரத்குமார்- & ராதாரவி அணி தோல்வி அடைந்தது. நாசர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாசர் தலைமையிலான இந்த அணி தற்போது சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று வருட நடிகர் சங்கத்தின் பதவி வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வருவதால் ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனால் கடந்தமுறை போல் ஏமாறாமல் இந்த முறை நடிகர் சங்கத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்று சரத்குமார் அணி முடிவு செய்துள்ளது.

இருப்பினும் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விஷால் தரப்பினர் கூறி வருகின்றனர். எனவே இதுகுறித்து சட்ட ஆலோசகர்கள் ஆராய்ந்து நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சரத்குமார், ராதாரவி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்