ஆப்நகரம்

'இரும்புத்திரை' இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்கும் விஷால்!

இரும்புத்துரை இந்தி ரீமேக்கில் விஷால் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Jan 2021, 9:03 pm
விஷால் நடித்து வெளியாக உள்ள படம் 'சக்ரா'. சக்ரா படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில், விஷாலுக்கு நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்திருக்கிறார்கள். இதில் ஆர்மி அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil விஷால்
விஷால்


இந்தப் படம் பெரும் தொகைக்கு ஓடிடிக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், இந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், அனைத்து நடிகர்களுமே படத்தை தியேட்டரில் வெளியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள். அதன்படி, விஷாலின் சக்ராவும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் விஷால்.

இந்நிலையில் விஷால் நடித்து வெளியான 'இரும்புத்திரை' படம் இந்தி ரீமேக்கில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் 'இரும்புத் திரை'. இப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும், நடிகர் அர்ஜுன் வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சமந்தா மற்றும் ரோபோ ஷங்கர் என பலர் நடித்திருந்தனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.

விக்னேஷ் சிவன் அமுக்குனினு தெரியும், ஆனால் இந்த அளவுக்கா?

தகவல் திருட்டு மூலம் நடைபெறும் சைபர் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு டெக்னோ - த்ரில்லர் படமாக வெளிவந்த படம் 'இரும்புத்திரை'. இப்படத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் நடைபெறும் கொள்ளைகளை விரிவாக விவரித்திருந்தனர்.

நவீன உலகில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மொபைல் போன்களால் நம்முடைய சுதந்திரம் எந்த அளவுக்கு பறிபோகிறது, நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள் நம்மை கவனித்துக்கொண்டு உள்ளது என்ற உண்மையை நமக்கு உணர்த்தி ஒருவித அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய படம் இரும்புத்திரை.


‘‘முதலில், இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து எடுப்பது என்றும், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பது என்றும் முடிவு செய்திருந்தார்களாம். விஷாலிடம் கதை சொன்னபோது, ‘‘அந்த வில்லன் வேடத்தில் நானே நடிக்கிறேன்’’ என விஷால் கூறியதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இயக்குநர் மித்தரன் தான், விஷாலை வற்புறுத்தி கதாநாயகனாக நடிக்க வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்தப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது என்றும் இதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தப்படத்தில் தமிழில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டு, தற்போது இந்தியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஷால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்