ஆப்நகரம்

நடிகர், குடும்பத்தை பிரித்த கொரோனா: நரக வேதனை என கவலை

ஊரடங்கு உத்தரவால் தானும், தன் மனைவி மற்றும் குழந்தைகளும் ஆளுக்கொரு நாட்டில் சிக்கிக் கொண்டதாக நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Apr 2020, 4:55 pm
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவுக்கும் விரானிகா ரெட்டிக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். 4வது குழந்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பிறந்தது.
Samayam Tamil vishnu manchu


இந்நிலையில் குடும்பம் பற்றி விஷ்ணு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நான் என் மனைவி, குழந்தைகளை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அதுவும் இது போன்ற நேரத்தில் அவர்களை பிரிந்திருப்பது வேதனை அளிக்கிறது. எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பார்க்க நாங்கள் அனைவரும் அந்த நாட்டிற்கு சென்றோம். என் அப்பா மோகன் பாபுவின் பிறந்தநாள் மார்ச் 19ம் தேதி என்பதால் நான் கடந்த மாதம் 7ம் தேதியே நாடு திரும்பிவிட்டேன். ஆனால் என் மனைவி, குழந்தைகள் அங்கேயே இருந்தார்கள்.

மனைவியும், குழந்தைகளும் நாடு திரும்ப வேண்டியது. ஆனால் முடியவில்லை. தனி விமானம் மூலம் அவர்களை அழைத்து வர முயன்றும் பலனில்லை. இது போன்ற நேரத்தில் அவர்களை பிரிந்திருப்பது நரகமாக இருக்கிறது.

நான் தினமும் வீடியோ கால் செய்து அவர்களுடன் பேசுகிறேன். அவர்களை நினைத்து கவலையாக இருக்கிறது. அந்த கவலையில் இரவில் தூக்கம் வருவது இல்லை என்றார்.

வைரலாகும் ஜான்வியின் பழைய போட்டோ: நல்ல வேளை ஸ்ரீதேவி பயந்தது நடக்கல

அடுத்த செய்தி

டிரெண்டிங்