விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த இன்று நேற்று நாளை படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் இன்று நேற்று நாளை. இப்படத்தில், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். காலத்தை கடந்து செல்லும் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமாரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால், அந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. அப்படி உருவாகும் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் 2ம் பாகமும் உருவாகயிருப்பதாக தயாரிப்பாளர் சிவி குமார் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் படத்தில் நடிக்கயிருக்கின்றனர். ஆனால், ஹீரோயின் தான் யார் என்று அறிவிக்கப்படவில்லை. இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிற்கு விஷ்ணு விஷாலின் படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால், அந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. அப்படி உருவாகும் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் 2ம் பாகமும் உருவாகயிருப்பதாக தயாரிப்பாளர் சிவி குமார் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் படத்தில் நடிக்கயிருக்கின்றனர். ஆனால், ஹீரோயின் தான் யார் என்று அறிவிக்கப்படவில்லை. இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிற்கு விஷ்ணு விஷாலின் படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.