ஆப்நகரம்

உண்மை சம்பவம் படமாகிறது

1985ல் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கவுள்ளார்கள்.

TOI Contributor 19 Jul 2016, 4:02 pm
1985ல் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கவுள்ளார்கள்.
Samayam Tamil vishnu vishals next is based on true events
உண்மை சம்பவம் படமாகிறது


இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். சமீபத்தில் தயாரிப்பாளரான விஷ்ணு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தயாரித்தார். ஏற்கனவே 2வது படமாக ‘ஜீவா’வில் சுசீந்திரனுடன் இணைந்த விஷ்ணு தற்போது 3வது முறையாக இணைகிறார். ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மாவீரன் கிட்டு’ என பெயரிடப்பட்டுள்ளது.

கிட்டு ஈழ விடுதலைக்காக போராடிய இயக்கத்தை சேர்ந்தவர். அவரது கதையாக இது உருவாகிறதா என்று கேட்டதற்கு சுசீந்திரன் அளித்த பதில், ‘‘இல்லை, இது ஈழ தமிழர் பற்றிய கதையோ இலங்கை போர் பற்றிய கதையோ கிடையாது. மாவீரன் கிட்டு துணிச்சலான ஒருவனின் கதை. தமிழ்நாட்டு மக்களுக்காக 1985ல் போராடிய ஒரு வீரனின் கதை. இதன் படப்பிடிப்பு பழனியில் நடக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்