ஆப்நகரம்

‘விஸ்வாசம்’ படத்திற்கு வந்த சிக்கல்: படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா?

பாக்கி தொகையில் 35 லட்ச ரூபாய் இன்றே வழங்கவதாகவும் மீதம் உள்ள தொகையை 4 வார காலத்துக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாக ‘விஸ்வாசம்’ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

Samayam Tamil 9 Jan 2019, 4:19 pm
கடன் பாக்கி உள்ளதால் ‘விஸ்வாசம்’ படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
Samayam Tamil viswasam2232-1546858603


எல்லா படங்களுக்கும் வரும் நிலைமை தற்போது அஜித் படத்திற்கும் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ரிலீஸுக்கு முன்பு பல்வேறு தடைகளைத்தாண்டிதான் வெளியாகிறது. அஜித் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்கும் அந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

சமீபத்தில் ரிலீசான சில படங்களுக்கு கடன் பிரச்சனைகள் இருந்ததால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் பேசித் தீர்த்து சுமூகமாக படம் ரிலீஸாக வைத்தனர். 96 படமும் , சீமராஜா படமும் வெளியாவதில் இப்படி சிக்கல் ஏற்பட்ட போது சம்பந்தப் பட்ட நடிகர்கள் உத்தரவாதம் அளித்தன் பேரில் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸானது.

தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு அதே போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் ,ஈரோடு , பகுதிகளில் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்த கடன் பாக்கி 78 லட்சத்தை திருப்பித்தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடைகோரி திரைப்பட பைனான்ஸியர் உமாபதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து அப்பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாக்கி தொகையில் 35 லட்ச ரூபாய் இன்றே வழங்கவதாகவும் மீதம் உள்ள தொகையை 4 வார காலத்துக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாக ‘விஸ்வாசம்’ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்