ஆப்நகரம்

ரஜினியின் பேச்சு உண்மையாக இருந்தது: நடிகர் விவேக்!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு உண்மையாக இருந்தது என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Mar 2018, 7:34 am
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு உண்மையாக இருந்தது என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vivek comments on rajinikanths political speech
ரஜினியின் பேச்சு உண்மையாக இருந்தது: நடிகர் விவேக்!


சென்னையில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அதில் அவரின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் மிகவும் கவர்ந்துள்ளது. சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் விழாவில் கூடியிருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் ரஜினி பேசினார்.

ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!இவை உண்மையாக இருந்தது.இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம்.மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்! @dinathanthi @ThanthiTV @PTTVOnlineNews @polimernews @sunnewstamil — Vivekh actor (@Actor_Vivek) March 6, 2018 இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவர்ந்திருக்கிறது, அவரது பேச்சில் உண்மை இருந்தது. ரஜினி அவர்களின் பேச்சு உண்மையாக இருந்தது. இருப்பினும் அ.தி.மு.க., தி.மு.க. எனும் இரு இமயங்கள் எதிரில். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்