ஆப்நகரம்

அவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி!

விவேக்கிற்கு, இயக்குநர் கே. பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா பரிசாக கிடைத்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 4:00 pm
கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விவேக். அவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் தொடர்ந்து பல பட வாய்ப்பு அவரை தேடி வர ஆரம்பித்தது. அது மட்டுமின்றி தனது நகைச்சுவை மூலம், சமுகத்திற்குக் கருத்து சொல்வதால் மக்களின் அன்பு அவருக்குக் கிடைத்தது.
Samayam Tamil அவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி!
அவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி!


படிப்படியாக முன்னேறி இன்று கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார். எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் விவேக் தனது குருநாதர் கே.பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்பை மறக்காமல், அடிக்கடி அவரை பற்றி மேடையில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

என்ன ஒரு அழகான சிரிப்பு: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி தலயின் லேட்டஸ்ட் போட்டோ

இந்த நிலையில் விவேக்கிற்கு, பாலச்சந்தர் பயன்படுத்திய பொருள் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுத பயன்படுத்திய பேனாவை அவரது மகள் புஷ்பா கந்தசாமி விவேக்கிற்கு பரிசாக கொடுத்துள்ளார்.

பூஜையுடன் தொடங்கியது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பட ஷூட்டிங்: ஹீரோயின் யார் தெரியுமா?

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விவேக் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அதில், 'யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்!



அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து நெட்டிசன் ஒருவர், 'தகுதி வாய்ந்த ஒருவருக்குக் கிடைத்துள்ளது. சந்தோஷமான விஷயம்' என்று குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்