ஆப்நகரம்

விவேக்கின் அம்மா இறந்துவிட்டதாக பரவிய செய்தி: ட்விட்டரில் அவர் கொடுத்த விளக்கம்

விவேக்கின் அம்மா சென்ற வருடம் இறந்த நிலையில், தற்போது தான் அவர் இறந்தார் என்பது போல புதிதாக சிலர் வதந்தி பரப்பு உள்ளனர். அதற்கு விவேக் ட்விட்டரில் பதில் கூறி உள்ளார்.

Samayam Tamil 22 Jul 2020, 8:23 pm
னிமா துறையையும் வதந்திகளையும் பிரிக்கவே முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி நாள் தோறும் ஏதாவது ஒரு செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கின்றது. குறிப்பாக நடிகர்களின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகள் அதிக அளவில் பரவுகின்றன.
Samayam Tamil Vivekh


இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கின் தாயார் நேற்று இரவு காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் பரப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் விவேக்கின் தாயார் சென்ற வருடமே இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தற்போது அவர் இறந்தது போல ஒரு செய்தியை விஷமிகள் சிலர் இணையத்தில் பரப்பி உள்ளனர். இது பற்றி அறியாத பலரும் இந்த தகவலை அதிகம் ஷேர் செய்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் ட்விட்டரில் விவேக்கை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் "நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார் 2019ல் இறந்துவிட்டார். ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஏது எப்போ என்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள்பரப்பபடுகிறது. ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறியுள்ள விவேக் "என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள். For me, my mom still lives with me!!" என தெரிவித்துள்ளார்.


இப்படி போலியான செய்திகளை பரப்பி வருபவர்களை பற்றி நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். "ஐயா எப்பவுமே எல்லோரும் முன்னாடி போகனும்முன்தான் ஆசைப்படுவாங்க ஆனா சில பேர் எப்பவுமே பின்னோக்கி போரதயே வேலையா வெச்சிருக்கரவுங்க செய்ர வேலை இது மன்னிப்போம் ஐயா" என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்


விவேக் சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். மரம் நாடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்.

மேலும் தற்போது கொரோனா காலகட்டத்தில் இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு விஷயங்களை விவேக் செய்து வருகிறார். சமீபத்தில் மாஸ்க் சரியாக அணியாமல் வெளியில் சுற்றி வருபவர்கள் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் விவேக். அது அதிகம் வைரலாகி இருந்தது.

"பொது மக்கள் மாஸ்க் அணிகிறோம் என்ற பெயரில் ஏதோ ஒரு துணியை வாயில் கட்டிக் கொள்கிறார்கள். சில நேரத்தில் அது கழுத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது, சில நேரங்களில் ஸ்டைலாக காதில் தொங்க விடுகிறார்கள், அப்போது மற்றவர்களிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். மாஸ்க் போடுபவர்கள் மூக்கையும் வாயையும் முழுமையாக மூடும் வகையில் அணிய வேண்டும். பாதிபேர் பேசும் போது அந்த மாஸ்க்கை எடுத்து விட்டு பேசுகிறார்கள். இப்படியெல்லாம் செய்யும் போது அந்த மாஸ்க் ஏன் போட வேண்டும்?" என விவேக் கேட்டு இருந்தார்.

கடைசியாக விவேக் நடிப்பில் தாராள பிரபு என்ற படம் தான் ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க விவேக் மிக முக்கிய ரோல் ஒன்றில் நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் மலேசியாவில் தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்