கிணற்றில் போட்ட கல்
மறைந்த விஜே சித்ராவின் கடந்த சில மாதங்களாக கிணற்றுக்குள் போட்ட கல் போல் எந்த அப்டேட்டுமே இல்லாமல் இருந்தது. அவரது கணவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து உயிருக்கு பாதுகாப்பு கேட்ட பிறகு சித்ரா தொடர்பான செய்திகள் அதிகம் வெளியான வண்ணம் உள்ளது.
சொத்துக்கள் இல்லை
சித்ராவின் பெற்றோரும் தங்களின் மகள் மரணம் தொடர்பாக அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சித்ராவின் பெற்றோர் சித்ராவுக்கு சொத்தெல்லாம் எதுவும் இல்லை. திருவான்மியூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் டபுள் பெட்ரூம் வீடு மட்டும்தான் உள்ளது.
நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்!
டியூ கட்ட முடியல
அந்த வீடும் லோனில்தான் சித்ரா வாங்கினார். அதற்கு தற்போது டியூ கூட கட்ட முடியவில்லை என்று கண் கலங்கினர். டியூ கட்ட முடியாததால் வங்கியில் அவகாசம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சித்ரா காரும் லோன் போட்டுதான் வாங்கினார் என்றும் அதையும் கட்ட முடியாததால் காரையும் எடுத்து சென்றுவிட்டார்கள் என்றும் கூறினர்.
VJ Chithra: அவங்க வாயை திறந்தாலே போதும்... விஜே சித்ரா பத்தின எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்!
சொந்த வீடுகள்
இந்நிலையில் சித்ரா தாம்பரம் மற்றும் மடிப்பாக்கத்தில் சொந்த வீடுகள் வாங்கி வைத்திருப்பதாகவும் அவை வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தங்க நகைகளை வாங்கி சேர்த்து வைத்திருந்ததாகவும் தகவல் பரவி வருகிறது.
அரசியல் பிரமுகர்கள்
சித்ராவுக்கு பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருந்ததுதான் அவர் சொற்ப காலத்தில் சொத்துக்களை வாங்கி குவித்ததற்கு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மறைந்த சித்ரா விஜேவாக பல ஆண்டுகளாக பணியாற்றினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மேலும் பல சீரியல்களில் நடித்துள்ள சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லீடிங் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார் சித்ரா. விஜய் டிவியின் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த சித்ரா சினிமாவிலும் நடித்து வந்தார்.
எறும்பு போல்
மேலும் கடை திறப்பு நிகழ்ச்சிகள் கல்லூரி நிகழ்ச்சிகள், டெலி ஷாப்பிங் நிகழ்ச்சிகள் என கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்தார். சித்ரா ஒரு நிமிடம் ரெஸ்ட் எடுக்க மாட்டார், எறும்பு போல் உழைப்பார் என அவரது அம்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.