ஆப்நகரம்

சிம்புவை இயக்கும் அஜித் பட இயக்குநர்

துரை அடுத்ததாக விஜய் ஆண்டனி மற்றும் சிம்புவை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2019, 1:58 pm
முகவரி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வி.சி.துரை. அதைத் தொடர்ந்து இவர் காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி, ஏமாலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இருட்டு படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil simbu


இதையடுத்து இவர் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் ஆண்டனி, விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடித்து வருவதால் , அந்த படம் முடிந்த பிறகே துரை படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர படத்தின் கதை, டைட்டில் பற்றிய எந்தவொரு தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

Champion: பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்ப்பு கொடுத்த சுசீந்திரன்

இதற்கிடையே துரை, சிம்புவுடன் இணைந்து தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரவியது. இந்நிலையில் துரை சிம்புவை வைத்து படம் எடுப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அது தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம்.

சிம்பு தான் இயக்கி, நடிக்கவுள்ள மகா மாநாடு படத்திற்கு பிறகே துரை படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்