ஆப்நகரம்

5 மாசம் ஆச்சு, ஜனவரி ரிலீஸ்: பூரிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன்

ஜனவரி மாதம் தங்கள் வீட்டில் புது வரவு இருக்கும் என்று கூறி தன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி செல்வராகவன்.

Samayam Tamil 2 Sep 2020, 12:13 pm
இயக்குநர் செல்வராகவன், கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்கிற மகளும், ஓம்கார் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து கீதாஞ்சலி தன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil gitanjali selvaraghavan


கீதாஞ்சலி தன் கர்ப்பம் பற்றி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

மூன்றாவது குழந்தை...லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் ஜனவரி ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். மெடர்னிட்டி ஜீன்ஸ் எவ்வளவு சவுகரியமானது என்பதே மறந்துவிட்டது. நான் ஃபிட்டாக உணர்கிறேன். ஆரோக்கியமாக மற்றும் ஹாட்டாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கீதாஞ்சலியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
வாழ்த்துகள் மேடம். குட்டி செல்வா அல்லது கீதாஞ்சலியை பார்க்க நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ புதுப்பட ரிலீஸ் போன்று ஜனவரி ரிலீஸ் என நீங்கள் கூறியிருப்பது வித்தியாசமாக இருக்கிறது. உடம்பை பார்த்துக்கோங்க என்று தெரிவித்துள்ளனர்.

லாக்டவுன் நேரத்தில் செல்வாரகவன் போடும் ட்வீட்டுகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதிலும் மகிழ்ச்சி குறித்து செல்வராகவன் போட்ட ட்வீட் பெரிய அளவில் ஹிட்டானது.

சூர்யாவை வைத்து என்.ஜி.கே. படத்தை எடுத்த பிறகு செல்வா புதுப்படம் குறித்து அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தன் தம்பி தனுஷுடன் மீண்டும் சேர்ந்து படம் பண்ண் போவதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். தனுஷ்-செல்வராகவன் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.

தனுஷ் தன் அண்ணனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மேலும் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சேர்ந்து வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படம் வைரலானது.

டீனேஜ் பையனுக்கு அப்பானு சொல்ல முடியுமா?: தனுஷ், மகன்களின் வைரல் போட்டோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் ஜகமே தந்திரம் நிச்சயமாக தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று விளக்கம் அளித்தனர்.

தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்தி படத்தில் நடித்து வந்தார் தனுஷ். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அத்ரங்கி ரே படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் மதுரையில் துவங்கும் என்று அறிவிப்பு வெளியானது. அந்த படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி படம் ஆகும். முன்னதாக அவர் ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்