ஆப்நகரம்

Simbu ஈஸ்வரனில் சிம்புவின் அறிமுக காட்சி எப்படி இருக்கும் தெரியுமா?

ஈஸ்வரன் படத்தில் சிம்புவின் அறிமுக காட்சி குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது.

Samayam Tamil 11 Nov 2020, 10:09 am
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். 22 நாட்களில் படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிம்பு. மேலும் டப்பிங் பேசி முடித்த கையோடு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.
Samayam Tamil simbu


இந்நிலையில் படத்தில் சிம்புவின் அறிமுக காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காலா படத்தில் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது போன்று அறிமுக காட்சி இருந்தது அல்லவா அதே போன்று தான் சிம்புவின் அறிமுக காட்சியாம்.

சிம்பு கிரிக்கெட் விளையாடுவது போன்று தான் அவரின் அறிமுக காட்சி இருக்குமாம். அந்த காட்சிக்கு மோஷன் போஸ்டரில் வந்த தீம் மியூசிக் இருக்குமாம். இந்நிலையில் தீபாவளி பரிசாக ஈஸ்வரன் படத்தின் டீஸர் வரும் 14ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஈஸ்வரன் செட்டில் இருந்து புதுப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரன் படத்தில் நடிக்கத் துவங்கிய பிறகு சிம்பு சமூக வலைதளங்களில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவ்வப்போது அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

ஈஸ்வரன் படத்திற்காகத் தான் சிம்பு தன் உடல் எடையை 30 கிலோ குறைத்து ஒல்லியானார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் கஷ்ட காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்காகத் தான் ஒல்லியானார் என்று அவரின் ட்ரெய்னர் சந்தீப் தெரிவித்தார்.

சிம்புவை இப்படி புது ஆளாக பார்ப்பதில் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் படக்குழு பிரச்சனையில் சிக்கியுள்ளது. படப்பிடிப்பின்போது சிம்பு பாம்பை பிடித்து சாக்குப் பையில் போட்ட வீடியோ வெளியானது. அதை பார்த்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்தார்.

Simbu வம்பில் சிக்கிய சிம்பு: காரணம் 'அந்த வீடியோ'

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். படத்தில் நிஜ பாம்பை பயன்படுத்தவில்லை அது கிராபிக்ஸ் என்று சுசீந்திரன் விளக்கம் அளித்தார். கிராபிக்ஸ் பணிகள் நடந்தபோது யாரோ அந்த வீடியோவை கசியவிட்டுவிட்டார்கள் என்றார் சுசீந்திரன். ஆனால் இது குறித்த ஆதாரங்களை படக்குழு இன்னும் சமர்பிக்கவில்லை என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்