ஆப்நகரம்

விஜய் சேதுபதியின் லாபம் ஷூட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பிய ஸ்ருதி: ஏன் தெரியுமோ?

விஜய் சேதுபதியின் லாபம் படப்பிடிப்பில் இருந்து ஸ்ருதி ஹாசன் பாதியில் கிளம்பிச் சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 11:04 am
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லாபம். லாக்டவுனால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Samayam Tamil laabam


தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறார்கள். விஜய் சேதுபதியும், ஸ்ருதியும் படப்படிப்பு தளத்தில் இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் படப்பிடிப்பு நடப்பதால் ஸ்பாட்டில் அதிக ஆட்கள் இருக்கக் கூடாது, பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது, கூட்டம் கூட விடக் கூடாது என்று அரசு விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் லாபம் படப்பிடிப்பில் கூடிய ரசிகர்கள் கூட்டத்தை படக்குழுவால் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

இதை பார்த்த ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டாராம். பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் அவர் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் இன்னும் நம்மிடையே தான் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு மக்கள் எதுவுமே நடக்காதது போன்று இருக்கிறார்கள்.

மாஸ்க் அணிவது இல்லை, சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை, கூட்டம் கூட பயப்படுவதே இல்லை. இதை எல்லாம் பார்த்து தான் வைரஸ் பயத்தில் ஸ்ருதி கிளம்பிவிட்டார் போன்று.

லாபம் படத்தில் ஜகபதி பாபு, கலையரசன், சாய் தன்ஷிகா, ரமேஷ் திலக், ப்ரித்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதியும், ஸ்ருதியும் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுனுக்கு முன்பு விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார். விஜய் ஹீரோவாக நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800ல் நடிக்கவிருந்தார் விஜய் சேதுபதி. தமிழினத் துரோகி முத்தையாவாக நடிக்கக் கூடாது என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த படத்தில் இருந்து விலகினார்.

என் பெயரை சொல்லி நடிகைகள், பெண்களை ஏமாற்றுகிறார், உஷார்: பிரபல இயக்குநர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்