ஆப்நகரம்

கமல் போஸ்டரில் சாணி அடிச்சிருக்கேன், ரஜினி ஏன் அரசியலுக்கு வர்றாரு தெரியுமா?: ராகவா லாரன்ஸ்

இந்த வயதில் ரஜினி ஏன் அரசியலுக்கு வருகிறார் என்பதற்கான காரணத்தை ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Dec 2019, 10:22 pm
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
Samayam Tamil raghava lawrence


அவர் மேடையில் கூறியதாவது,

சொன்னா தப்பு இல்ல. சின்ன வயசுல கமல் சார் போஸ்டரில் சாணி அடிப்போம். ஆனால் இப்போ தான் தெரியது, நிலைமை வேறன்னு. சேர்ந்து வர மாதிரி இருக்கு. அதிசயம், அற்புதம். தலைவரே ஒரு அதிசயம் அற்புதம் தான். அவர் தான் எங்களுக்கு எல்லாம் குரு. அவர் யாரையாவது திட்டி பார்த்திருக்கிறீர்ளா?. அவர் யார் முதுகிலாவது குத்தி பார்த்திருக்கிறீர்களா?. இல்லை. அது தான் தலைவர்.

எல்லோரும் அவரு படம் பப்ளிசிட்டிக்காக பண்றாருன்னு சொல்றாங்க. டேய், பப்ளிசிட்டிக்கு இன்னொரு பேரே இந்தியன் சூப்பர் ஸ்டார் டா. இந்த வயசுல ஏன் அரசியலுக்கு வருகிறார் தெரியுமா...உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டடேன்...அதுக்குத் தான். யாராச்சும் என் தலைவனை பத்தி தப்பா பேசினா நான் திருப்பி பேசுவேன்.

அதிசயம் அற்புதம் இறங்குனா களத்துல: வெளியானது 'தனி வழி' லிரிக்கல் வீடியோ

ஒரேயொருத்தர் மட்டும் என் தலைவனை பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கிறாரு...அப்படி பேசக் கூடாது. அவர் எல்லாம் நாட்டுக்கு கேடு என்றார்.

ராகவா லாரன்ஸ் பேசியதை கேட்டவர்கள், இவர் ஏன் தர்பார் மேடையில் அந்த நபருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தெலங்கானா என்கவுண்டர்: லேட்டா சொன்னாலும் ரொம்ப சரியாச் சொன்ன நயன்தாரா

அடுத்த செய்தி

டிரெண்டிங்