ஆப்நகரம்

எல்லாருக்கும் அம்மாவா நடிச்சாச்சு; ஆனா விஜய்க்கு மட்டும் இல்லை- வருத்தத்தில் பிரபல தமிழ் நடிகை!

நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என வேதனைப்படுவதாக மூத்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2019, 5:39 pm
தமிழ் சினிமாவில் ஒருசமயம் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். குறிப்பாக ஏராளமான நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து கொண்டிருக்கிறார்.
Samayam Tamil Vijay


ஆனால் இவருக்கு ஒரு குறை இருக்கிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, நான் பெரிய நடிகர்களில் பலருக்கும் அம்மாவாக நடித்திருக்கிறேன். விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை.

இதனை ஒரு குறையாகவே கருதுகிறேன். ஆனால் அவருக்கு நான் அண்ணியாக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் விரைவில் அவர் விஜய் உடனுடன் அம்மாவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகாசி படத்தில் விஜய்க்கு அண்ணியாக சரண்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது பேச்சு அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்