ஆப்நகரம்

கதைபடி கிளாமர் அவசியம் என்றால் நடிக்கலாம்: சாய் பல்லவி!

‘’கதைக்கு கிளாமர் அவசியம் என்றால், நடிப்பதில் தவறில்லை’’ என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

TOI Contributor 1 Nov 2016, 3:09 pm
‘’கதைக்கு கிளாமர் அவசியம் என்றால், நடிப்பதில் தவறில்லை’’ என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
Samayam Tamil we can act in glamour roles if it is necessary says sai pallavi
கதைபடி கிளாமர் அவசியம் என்றால் நடிக்கலாம்: சாய் பல்லவி!


‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. படத்தில் மலர் டீச்சர் என்ற பெயரில் தமிழ்ப் பெண்ணாக நடித்தவர். இவர். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்

இந்நிலையில், ஒரு தமிழ் படத்தில் கிளாமராக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும், இதனால் அவரிடம் நெருங்க சில இயக்குனர்கள் தயங்குவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த செய்தியை மறுக்கும் வகையில் சாய் பல்லவி கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமாவில் இன்னும் நான் முழுமையாக இறங்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்க வைக்க இதுவரை எந்த இயக்குனரும் என்னை சந்தித்ததும் கிடையாது, போனில் தொடர்பு கொண்டதும் கிடையாது. மேலும் அவர்கள் என்னிடம் கிளாமராக நடிக்கக் கேட்டதாகவும், அதற்கு நான் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது உண்மையில்லை. நான் தமிழில் முழுமையாக களமிறங்குவதற்கு முன்பே இப்படிப்பட்ட செய்திகள் வருவதை கண்டு வருத்தப்படுகிறேன். மேலும் படத்தின் கதைபடி கிளாமர் அசியம் தேவை என்றால் அப்படி நடிப்பதில் தவறில்லை.

இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்