ஆப்நகரம்

குழந்தைகள் விஷயத்தில் பெரிய தப்பு பண்ணிட்டேன்: ஹேன்ட்சம் ஹீரோ

தன் இரட்டை குழந்தைகள் விஷயத்தில் பெரிய தவறு செய்துவிட்டதாக ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Dec 2020, 4:26 pm
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டு அமல் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் என்றும், பெண் குழந்தைக்கு எல்லா என்றும் பெயர் வைத்தனர்.
Samayam Tamil george clooney


அலெக்சாண்டர், எல்லாவுக்கு தற்போது மூன்று வயதாகிறது. அவர்களுக்கு இத்தாலிய மொழியில் பேச ஆள் வைத்து கற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த ஜார்ஜ் க்ளூனி தன் பிள்ளைகள் பற்றி பேசினார். அந்த பேட்டியில் ஜார்ஜ் க்ளூனி கூறியதாவது,

எங்கள் குழந்தைகள் விஷயத்தில் ஒரு தப்பு பண்ணிட்டோம். அவர்கள் இத்தாலிய மொழியில் சரளமாக பேசுவார்கள். மூன்று வயதில் இத்தாலிய மொழியில் சரளமாக பேசுகிறார்கள். எனக்கோ, என் மனைவிக்கோ இத்தாலிய மொழியில் பேசத் தெரியாது. அதனால் அவர்கள் அந்த மொழியில் பேசினால் புரியாது. அந்த விஷயத்தில் தப்பு பண்ணிட்டோம்.

குழந்தைகளுக்காக வீட்டில் சில விஷயங்களை மாற்ற வேண்டியதாகிவிட்டது. வீட்டில் இருக்கும் என் அலுவலகத்தை நர்சரியாக மாற்றிவிட்டோம். அது ரொம்ப மோசம் என்றார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் ஜார்ஜ் க்ளூனி கூறியதாவது,

குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நானும், அமலும் பேசியதே இல்லை. திடீர் என்று ஒரு நாள் குழந்தைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தோன்றியது. மருத்துவரிடம் சென்று அல்ட்ராசவுண்ட் செய்து பாரத்தோம்.

அமலை பரிசோதித்த மருத்துவரோ உங்களுக்கு மகன் பிறக்கப் போகிறான் என்றார். ஆண் குழந்தை அருமை என்று நினைத்தேன். உடனே, இன்னொரு குழந்தையும் வருகிறது என மருத்துவர் கூறினார் என்றார்.

14 நண்பர்களுக்கு தலா ரூ. 7. 42 கோடி பணம் கொடுத்த பிரபல நடிகர்

முன்னதாக ஜார்ஜ் க்ளூனி தான் திருமணமே செய்து கொள்ளப் போவது இல்லை என்று நினைத்து கடந்த 2013ம் ஆண்டு தன் நண்பர்கள் 14 பேருக்கு தலா ரூ. 7. 42 கோடி கொடுத்திருக்கிறார். பணம் கொடுத்து சரியாக ஓராண்டு கழித்து அவர் அமலை திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்