ஆப்நகரம்

நாங்களும் தான் நம்பினோம், என்ன செய்ய?: ரஜினி அண்ணன்

உடல்நலத்தை காரணமாக சொல்லியிருப்பதால் ரஜினியை மனதை மாற்றிக் கொள்ளுமாறு கூற முடியாது என அவரின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Dec 2020, 3:04 pm
ரஜினியின் திடீர் முடிவு குறித்து அவரின் அண்ணன் சத்யநாராயணா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we too believed says rajinikanths brother sathyanarayana
நாங்களும் தான் நம்பினோம், என்ன செய்ய?: ரஜினி அண்ணன்


அரசியல்

ஜனவரி மாதம் கட்சி துவங்குகிறேன், டிசம்பர் 31ல் தேதியை அறிவிக்கிறேன் என்றார் ரஜினி. அதை பார்த்தவர்கள் ஜனவரி, டிசம்பர்னு சொல்கிறாரே தவிர எந்த ஆண்டு என சொல்லவில்லையே என்றார்கள். மேலும் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் என்று சொல்வதை நம்ப முடியாது. இது புஸ்ஸாகப் போகிறது என்று விமர்சித்தார்கள். ஆனால் ரஜினி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கட்சி துவங்கும் வேலையில் ஈடுபட்டார். இந்நிலையில் தான் அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளும்படி செய்துவிட்டது உடல்நிலை.

ரஜினி

நான் கட்சி துவங்கவில்லை என்று ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என்றார் ரஜினி.

அண்ணன்

ரஜினியின் முடிவு குறித்து பெங்களூரில் வசிக்கும் அவரின் அண்ணன் சத்யநாராயணா பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இது ரஜினியின் முடிவு. மனதை மாற்றிக் கொள்ளுமாறு யாரும் அவரை கட்டாயப்படுத்த முடியாது. ரஜினி கண்டிப்பாக கட்சி துவங்குவார் என்று மக்கள் நம்பியதை போன்று தான் நாங்களும் நம்பினோம். அவர் உடல்நலனை காரணமாக தெரிவித்துள்ளார். அதனால் அவரை எங்களால் கட்டாயப்படுத்த முடியாது. இது அவரின் விருப்பம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும். நேற்று தான் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தேன் என்றார்.

ஆசி

கட்சி வேலையை துவங்கும் முன்பு ரஜினி பெங்களூருவுக்கு சென்று அண்ணனிடம் ஆசி வாங்கிவிட்டு வந்தார். அவர் ஆசி வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ரஜினி கட்சி துவங்காதது வருத்தம் தான் என்றாலும் அவர் நல்லா இருந்தாலே போதும் என்கிறார்கள் ரசிகர்கள். நாளை மறுநாள் கட்சி துவங்கும் தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினியின் திடீர் முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும் அவரின் நலன் தான் முக்கியம் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்