ஆப்நகரம்

Rajeev Pillai: திருமணத்தை விட மீட்பு பணிதான் முக்கியம் - களத்தில் இறங்கிய நடிகர் ராஜீவ் பிள்ளை

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை தன் திருமண வேலைகளை நிறுத்திவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

Samayam Tamil 21 Aug 2018, 10:49 am
மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை தன் திருமண வேலைகளை நிறுத்திவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
Samayam Tamil rajeev pillai


மலையாள படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் ராஜீவ் பிள்ளை. தமிழில் தலைவா படத்தில் விஜயுடனும், ஆம்பள படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

திருமணம் தள்ளி வைப்பு:
இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அவரின் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருமண வேலைகளை பார்ப்பதை விடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, நிவாரண முகாம்களில் சேர்க்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் படிக்க : திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாம் பணிக்கு சென்ற மருத்துவர்!

மழை அதிகமான சமத்தில் எளிமையாக திருமணத்தை எளிமையாக நடத்தி விட வேண்டும் என நினைத்தாராம். ஆனால் தற்போது சூழலை பார்த்து பத்து பேர் முன்னிலையில் தாலி கட்டும் சடங்கு வைத்தால் போதும், அதில் மீதம் இருக்கும் தொகையை வெள்ள மீட்புக்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்