ஆப்நகரம்

எனக்கு புருஷனா வருபவருக்கு இந்த 3 குணம் கண்டிப்பா இருக்கணும்: நிவேதா தாமஸ்

தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார். அவரிடம் மூன்று முக்கியமான குணங்களை எதிர்பார்க்கிறார் நிவேதா.

Samayam Tamil 18 Aug 2020, 9:58 am
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், மலையாள படங்களிலும் கவனம் செலுத்துகிறார். தமிழில் அவர் ஹீரோவின் தங்கை, மகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
Samayam Tamil nivetha thomas


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ். படத்தை பார்த்தவர்கள் ஹீரோயின் நயன்தாராவுக்கு வேலையே இல்லை, நிவேதாவுக்கு தான் வெயிட்டான கதாபாத்திரம், அதை உணர்ந்து அவர் நடித்திருக்கிறார் என்றார்கள். தான் இறக்கப் போவது தெரிந்த பிறகு நிவேதா தாமஸ் செய்த செயல்களை பார்த்து பலரும் கண் கலங்கினார்கள். தன் நடிப்பால் ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தார் நிவேதா.

முன்னதாக கமல் ஹாஸன் மகளாக பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். தமிழ் சினிமா நிவேதாவை தங்கச்சி பாப்பாவாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நிவேதா தாமஸ் தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து நிவேதா கூறியதாவது,

எனக்கு வரப் போகும் கணவரிடம் மூன்று முக்கிய குணங்கள் இருக்க வேண்டும். அவர் உண்மையானவராக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஷேர் செய்ய வேண்டும். பயணம் செய்வதில் நாட்டம் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த மூன்று குணங்கள் இருக்கும் நபரை பார்த்தால் உடனே அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பேன்.

சரியான நேரத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ளவோ, காதலிக்கவோ நேரம் இல்லை. நான் தற்போது நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இயக்குநர் ஆகும் ஆசை இருக்கிறது என்றார்.

லாக்டவுனுக்கு முன்பு நிவேதா பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் பவன் கல்யாண் வழக்கறிஞராக நடிக்கிறார். வக்கீல் சாப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.

இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்பு பிரபாஸ் ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ராதே ஷ்யாம் படத்தை அடுத்து பிரபாஸ் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் சேர்ந்து நடிக்கிறார். அந்த படத்தை அடுத்து அவர் ஓம் ரவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க உள்ளார். ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஆதிபுருஷ்.. பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட வரலாற்று படம்! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். ஆதிபுருஷ் படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட பல மொழிகளில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்