ஆப்நகரம்

நயன்தாராவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி செய்கிறார்?

நயன்தாரா தொடர்ந்து தனது கொள்கைகள் ஒவ்வொன்றாக தளர்த்திக் கொண்டிருக்கிறார்.

Samayam Tamil 5 Nov 2019, 10:58 am
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா அண்மை காலமாக செய்து வரும் காரியங்கள் பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. புதுப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கும்போதே ஷூட்டிங்கோடு சரி மற்றபடி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று கறாராக கூறிவிடுவார் நயன்தாரா.
Samayam Tamil nayanthara


நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன். ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாட மாட்டேன் என்று ஒரு கொள்கை வைத்திருந்தார் நயன்தாரா.

அண்மை காலமாக அந்த கொள்கையை தளர்த்தி அஜித், விஜய், ரஜினி, சிரஞ்சீவி என்று பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தனது கதாபாத்திரம் வெயிட்டாக இல்லை என்று தெரிந்தும் நடிக்கிறார்.

ஓ, இதற்குத் தான் பிக் பாஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டதா, பேஷ் பேஷ்

விளம்பரப் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா தற்போது குறிப்பிட்ட விளம்பரங்களில் நடிக்கிறார். அழகு சாதனப் பொருட்கள் விளம்பரப் படத்தில் நடிப்பது இல்லை என்ற முடிவில் இருந்தார் நயன்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது அழுகு சாதன பொருட்களின் விளம்பரத்தில் நடிக்குமாறு நயன்தாராவிடம் கேட்க அம்மணி உடனே மும்பைக்கு கிளம்பிச் சென்று நடித்துக் கொடுத்துள்ளார்.

இதை எல்லாம் பார்ப்பவர்கள் நயன்தாராவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி ஒவ்வொரு கொள்கையாக தளர்த்திக் கொண்டிருக்கிறார். அவர் கெத்தை அவரே விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்.

நான் பிரதமருக்கு எதிராக பேசவும் இல்லை, குறை சொல்லவும் இல்லை: எஸ்.பி.பி.

இதற்கிடையே நயன்தாராவும், கத்ரீனா கைஃபும் சேர்ந்து பணியாற்றுவது தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. எத்தனையோ நடிகைகள் இருந்தும் கத்ரீனா நயன்தாராவை அழைத்துள்ளார் என்றால் தலைவியின் மதிப்பு எப்படி என்று பாலிவுட்காரர்களுக்கும் தெரிந்துள்ளது என ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்