ஆப்நகரம்

கமல் சாருக்கு இப்போதுதான் அடக்குமுறை; நான் 6 ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்: உதயநிதி

''கமல் சாருக்கு இப்போதுதான் அடக்குமுறை. ஆனால், நான் கடந்த 6 ஆண்டுகளாக அடக்குமுறையை சந்தித்து வருகிறேன்'' என்று நடிகரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 23 Feb 2017, 12:14 pm
''கமல் சாருக்கு இப்போதுதான் அடக்குமுறை. ஆனால், நான் கடந்த 6 ஆண்டுகளாக அடக்குமுறையை சந்தித்து வருகிறேன்'' என்று நடிகரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil what happened today to kamal sir has happening to me past years
கமல் சாருக்கு இப்போதுதான் அடக்குமுறை; நான் 6 ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்: உதயநிதி


சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது, திமுக ரகசிய வாக்கெடுப்பு கோரியது. ஆனால், இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சட்டமன்றத்தில் நடந்த அமளியால், திமுக வெளியேற்றப்பட்டு, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து, திமுக நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டது.

சென்னை, ஆதம்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், ''போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்பா ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதனால்தான் சென்றேன். ஆனால், என்னை அழைத்து மேடையில் அமர வைத்துவிட்டனர். நான் கட்சியில் எந்தப் பதவியும் கேட்கவில்லை.

கமல் சாருக்கு தற்போதுதான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நான் கடந்த 6 ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். நான் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை தொடர்ந்து பழி வாங்கி வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

what happened today to kamal sir has happening to me past years

அடுத்த செய்தி

டிரெண்டிங்