ஆப்நகரம்

Kamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு?: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்

கமல் ஹாஸனுக்கும், தனக்கும் இடையேயான உறவு எந்த வகையானது என்று நடிகை பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 May 2020, 10:55 am
கடந்த 2000ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் நடிகையானவர் அமெரிக்காவில் வசிக்கும் பூஜா குமார். அவர் தமிழ் தவிர்த்து இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு பெரிய பிரேக்கிற்கு பிறகு உலக நாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் பூஜா குமார்.
Samayam Tamil kamal haasan


அந்த படத்தில் அவரை பார்த்த தமிழ் ரசிகர்கள், அப்படியே இருக்காரே என்று வியந்தார்கள். இதையடுத்து கமல் நடித்த உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் பூஜா குமார் நடித்தார். இந்நிலையில் கமல் நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்திலும் பூஜா குமார் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

விஸ்வரூபம் படத்தில் நடித்தபோதே கமலுக்கும், பூஜா குமாருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. மேலும் கமல் வாழ்வில் நடந்த ஒரு துயர சம்பவத்திற்கு காரணம் பூஜா என்று பேசினார்கள். இந்நிலையில் பூஜா மீண்டும் கமல் படத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானதும் அது உண்மையா இல்லையா என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் வாய்க்குவந்தபடி பேசத் துவங்கியுள்ளனர்.
இனி கமல் படங்களில் பூஜாவை கண்டிப்பாக பார்க்கலாம். கமலை நம்பி தான் பூஜா கோலிவுட்டில் இருக்கிறார். கமல் வீட்டு விசேஷங்களில் எல்லாம் கலந்து கொள்கிறார் என்பதில் இருந்தே தெரிய வேண்டாமா என்று கண்டமேனிக்கு விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இந்த தேவையில்லாத பேச்சுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் பூஜா குமார் கூறியதாவது,

எனக்கு கமல் சார் மற்றும் அவர் குடும்பத்தாரை பல காலமாக தெரியும். நான் கமல் சாருடன் சேர்ந்து நடிக்கத் துவங்கியபோதே அவரின் குடும்பத்தாரை தெரியும். தயாரிப்பாளரான அவரின் அண்ணன், மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்ட அனைவரையும் நன்கு தெரியும்.

குடும்பத்தாருடன் நல்ல பழக்கம் என்பதால் தான் அவர்கள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கிறேன் என்றார்.

மேலும் தலைவன் இருக்கின்றான் படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பூஜா குமார். எதுவும் நடக்கலாம், யார் கண்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
தலைவன் இருக்கின்றான் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவன் இருக்கின்றான் என்கிற பெயரில் கமலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஆன்லைனில் பேசிக் கொண்டதை பார்த்தவர்கள் வேறு விதமாக நினைத்தார்கள்.

அதாவது தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார், அதனால் தான் நிகழ்ச்சிக்கு படத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி நாசரின் மகனாக நடிக்கிறார்.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைவன் இருக்கின்றான் என்பது உங்களுக்கே தெரியும்.
தேவர் மகன் படத்தில் நாசர் வில்லனாக நடித்திருந்தார். அப்படி என்றால் தலைவன் இருக்கின்றானில் கமல் ஹாஸனின் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் போன்று. வர வர இந்த விஜய் சேதுபதி வில்லனாகி ஹீரோக்களை டார்ச்சர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். என்னமோ போங்க விஜய் சேதுபதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்