ஆப்நகரம்

எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா? பொங்கி எழுந்த காமெடி நடிகர்!

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக காமெடி நடிகர் சதீஷ் தற்போது டுவிட்டரில் பொங்கி எழுந்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 10:52 pm
ஸ்டெர்லைட்டிற்கு எதிராக காமெடி நடிகர் சதீஷ் தற்போது டுவிட்டரில் பொங்கி எழுந்துள்ளார்.
Samayam Tamil sathish


தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனையில் தற்போது காவிரி பிரச்சனையை தொடர்ந்து முக்கியமாக கருதப்படுவது ஸ்டெர்லைட் போராட்டம். தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பல நாடுகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியில் பெரியவர்கள், இளைஞர்கள், சிறியவர்கள், பெண்கள் என்று பலரும் தங்களது நலனுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷூம் தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, லண்டனில் இருக்கும் ஒரு பிஸினஸ்மேன், ஆஸ்திரேலியாவில் இருந்து தாதுப்பொருளை தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமா மாத்தி கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட்.

இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சனை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்