ஆப்நகரம்

மாயன் காலண்டர்படி இன்று எத்தனை மணிக்கு உலகம் அழியும்?: பிரேம்ஜி அமரன்

இருக்கிற பிரச்சனை போதாது என்று பிரேம்ஜி அமரனுக்கு புதுசாக ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2020, 9:59 am
2020ம் ஆண்டு எந்த நேரத்தில் துவங்கியதோ தெரியவில்லை, 6 மாதங்கள் கூட முடியாத நிலையில் போதும் போதும் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 15 நாட்களில் சரியாகிவிடும், ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்று நினைத்த வைரஸ் பிரச்சனை இதுவரை சரியாகவில்லை.
Samayam Tamil premji amaren


சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. கடவுளே, இந்த கொரோனாவுக்கு ஒரு அழிவே இல்லையா என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மாயன் காலண்டரின்படி 21.06.2012 அல்ல மாறாக 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி தான் உலகம் அழியும் என்கிற தகவல் தீயாக பரவியுள்ளது.

சமூக வலைதளங்களில் அது பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வாட்ஸ்ஆப்பிலும் இன்று உலகம் அழியப் போவதாக ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். காலையில் சூரியன் வந்தாச்சு, நாங்களும் எழுந்தாச்சு, இன்னும் உலகம் அழியவில்லையே. அப்படி என்றால் இதுவும் பல்பா?. இனி நாங்கள் மாயன் காலண்டரை நம்பவே மாட்டோம் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மாயன் காலண்டரின்படி இன்று எத்தனை மணிக்கு உலகம் அழிகிறது என்று கேட்டுள்ளார்.
பிரேம்ஜி அமரனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

கஜினி படத்தில் சூர்யாவின் டைரியில் ஜூன் 21ம் தேதிக்கு பிறகு எதுவுமே இல்லை. அதில் இருந்தே தெரியவில்லையா, இன்று உலகம் கண்டிப்பாக அழிந்துவிடும். கொரோனா வைரஸ், வெட்டுக்கிளி பிரச்சனை, நியூயார்க் வெறிச்சோடும், திருமணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் ஆகியவற்றை சரியாக கணித்த சூர்யா உலக அழிவையும் கணித்துவிட்டார். அவர் கணிப்பு பொய்யாகாது.
12.12 மணிக்கு உலகம் அழியும். அப்படி இல்லை என்றால் கண்டிப்பாக 21.21 மணிக்கு அழிந்துவிடும். ஏற்கனவே உலகம் அழிந்துவிட்டது நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம் பிரேம்ஜி. எதிலும் டைம் சொல்லவில்லை, எந்நேரம் வேண்டுமானாலும் உலகம் அழியலாம்.

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் ப்ரோ. உலகம் அழியும் முன்பு கடைசியாக ஒரு முறை உங்களுக்கு பிடித்த மதுபானத்தை அருந்தவும். உங்களுக்கு என்று கல்யாணம் நடக்கிறதோ அன்று தான் இந்த உலகம் அழியும். அதுவரை கண்டிப்பாக அழியாது.

உலகம் அழிவதா, வாய்ப்பில்ல ராஜா. காலையிலேயே தண்ணியா?. நீங்கள் கடைசி பெக் அடித்து முடிந்ததும் உலகம் அழிந்துவிடும். உலகம் அழிந்துவிடும் என்று நினைத்து தொடர்ந்து தண்ணி அடித்தால் தலைவலி தான் ப்ரோ வரும். உலகம் எல்லாம் அழியாது என்று தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் வைரஸ் தமிழகத்தில் மக்களை அழிக்கும். தற்போது தமிழகத்தில் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது தான். மேலும் சூர்யாவின் காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்யும் காட்சிகள் இருந்தது. நிஜத்திலும் அது கடந்த மாதம் நடந்துவிட்டது. இந்நிலையில் தான் கஜினி படம் படி இன்று உலகம் அழியும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்