ஆப்நகரம்

ஜெயித்தாலும் பழைய வேலையைத்தான் செய்வேன் என்கிறார் ரமணியம்மாள்!

நான் இந்தப் பாட்டுப் போட்டியில் ஜெயித்தாலும் நான் பார்த்துக் கொண்டிருந்த பழைய வேலையை விடமாட்டேன் என்று ராக்ஸ்டார் ரமணியம்மாள் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 5:57 pm
நான் இந்தப் பாட்டுப் போட்டியில் ஜெயித்தாலும் நான் பார்த்துக் கொண்டிருந்த பழைய வேலையை விடமாட்டேன் என்று ராக்ஸ்டார் ரமணியம்மாள் கூறியுள்ளார்.
Samayam Tamil ramaniammal


பிரபல தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த போட்டியில் தனது வயது பற்றி யோசிக்காமல் கலந்து கொண்டு இறுதிகட்டத்தை தொட்டுள்ளார் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ‘‘பாட்டிக்கும், பேரக் குழந்தைகளுக்கும் இடையில் உண்டான போர் இது என்று தான் கூறுவேன். எனக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும். இறுதிச்சுற்றில் அவர் படப் பாடலை பாட இருக்கிறேன். என்னை ஜெயிக்க வைக்கிறது எல்லாம் இன்றைய கால பிள்ளைகள் கையில் உள்ளது.

சம்பாதிக்காத புருஷனை வைத்துக்கொண்டு, வீட்டு வேலை செய்துதான் 8 பிள்ளைகளையும் காப்பாற்றினேன். நாளைக்கு இந்த நிகழ்ச்சியில் ஜெயித்து சினிமாவில் பாடினாலும் பழசை மறக்காமல் நான் செய்து கொண்டிருக்கும் வீட்டு வேலையை தான் செய்வேன்’’ என்றார் ரமணியம்மாள்.

பணம், புகழ் வந்ததும் பழசை மறக்கும் மக்களுக்கு மத்தியில் பாட்டி ரமணியம்மாளின் உணர்வுப்பூர்வ வார்த்தையைக் கேட்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்