ஆப்நகரம்

Dhanush:ஆல்பர்ட் தியேட்டரில் தனுஷை பார்த்து காதலில் விழுந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷை சந்தித்து காதலில் விழுந்தது பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்பு கூறியது குறித்து தற்போது பேசப்படுகிறது.

Samayam Tamil 18 Jan 2022, 9:05 am
ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தனுஷும் பிரிந்துவிட்டது அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
Samayam Tamil when aishwarya rajinikanth met dhanush in albert theatre
Dhanush:ஆல்பர்ட் தியேட்டரில் தனுஷை பார்த்து காதலில் விழுந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


விவாகரத்து

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தனுஷும் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா, தனுஷ் தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பேட்டி பற்றி பேசப்படுகிறது.

காதல் கொண்டேன்

தங்களின் காதல் கதை பற்றி ஐஸ்வர்யா முன்பு பேட்டி ஒன்றில் கூறியதாவது, நானும், தனுஷும் ஒன்று சேர வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அதனால் நடந்திருக்கிறது. காதல் கொண்டேன் படம் பார்க்க ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்றபோது தனுஷை முதன்முதலாக சந்தித்தேன். சூப்பர் ஸ்டார் மகள் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள் என்றார்.

ஐஸ்வர்யா

படம் பிடித்துப் போகவே தனுஷை பாராட்டி பூங்கொத்து அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் எனக்கு போன் செய்து நன்றி தெரிவித்தார். அப்படித் தான் எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. 6 மாதங்களில் திருமணமாகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம் என்றார் ஐஸ்வர்யா.

மாற்றம்

காலப் போக்கில் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டோம். ஒருவருக்காக மற்றொருவர் மாற வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை என ஐஸ்வர்யா கூறியிருந்தார். ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கு 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்