ஆப்நகரம்

ஜீவா செய்த காரியத்தால் ஹோட்டலில் இருந்த அனைவரும் அவசரமாக வெளியேற்றம்

83 படத்தில் நடித்தபோது ஹோட்டல் அறையில் தம்மடித்து பிரச்சனையானது குறித்து தெரிவித்துள்ளார் ஜீவா.

Samayam Tamil 27 Jan 2020, 4:00 pm
83 படத்தில் நடித்தபோது ஹோட்டல் அறையில் தம்மடித்து பிரச்சனையானது குறித்து தெரிவித்துள்ளார் ஜீவா.
Samayam Tamil when jiiva smoked inside a hotel
ஜீவா செய்த காரியத்தால் ஹோட்டலில் இருந்த அனைவரும் அவசரமாக வெளியேற்றம்


83 விழா

1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து கபீர் கான் 83 என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாகவும், ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் போஸ்டரை வெளியிடும் விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டார்.

ஷூட்டிங்

நிகழ்ச்சியில் பேசிய ஜீவா கூறியதாவது, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சாராக நடிக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தர்மசாலாவில் கபில் தேவை சந்தித்தபோது அவர் ஸ்ரீகாந்த் சார் பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்தார். அதை எல்லாம் கேட்டு எனக்கு மேலும் பதட்டமாகிவிட்டது. ஸ்காட்லாந்திற்கு சென்ற பிறகு முதல் நாள் படப்பிடிப்பில் நான் சிகரெட் பிடிக்கும் காட்சியை படமாக்கினார்கள். பின்னர் பேக்கப் சொல்லிவிட்டனர் என்றார் ஜீவா.

ஹோட்டல்

நான் ஸ்ரீகாந்த் சார் போன்று புகைப்பிடிக்க வேண்டும் என்று அதற்காக நான் ஹோட்டல் அறையில் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் ஹோட்டலில் இருந்த ஸ்மோக் அலாரம் கத்தி கூப்பாடு போட்டு அங்கிருந்த அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர். யார் புகைப்பிடித்தது என்று கேட்டபோது அது நான் தான் என்று படக்குழுவிடம் தெரிவித்தேன் என்று ஜீவா தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த்

83 படத்தில் ரன்வீர் சிங் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரால் தான் இந்த படம் சாத்தியமாகியுள்ளது. 83 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு சென்னையில் ஸ்ரீகாந்த் சாரை சந்தித்து பேசினேன். அவரோ, டேய் கண்ணை மூடிட்டு சுத்துடா, பட்டா பாக்கியம், படலைன்னா லேகியம் என்றார் என ஜீவா கூறினார். 83 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரன்வீர் சிங் சென்னை வந்தபோது அவர் அணிந்திருந்த உடையை பார்த்தவர்கள் மனைவி தீபிகாவின் உடையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாரே என்று கலாய்த்தார்கள். அவர் அப்படித் தான் வித்தியாசமாக உடை அணிவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்