ஆப்நகரம்

நல்ல வேளை கீர்த்தி சுரேஷ் அந்த தப்ப மட்டும் பண்ணல

மகாநதி படத்தில் நடிக்க முடியாது என்று கீர்த்தி சுரேஷ் முதலில் தெரிவித்திருக்கிறார்.

Samayam Tamil 16 Jun 2020, 11:13 am
நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த படம் நடிகையர் திலகம் என்கிற பெயரில் தமிழில் வெளியானது. மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக நடித்தார்.
Samayam Tamil keerthy suresh


அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் கீர்த்தி சுரேஷா இது, நம்பவே முடியவில்லையே என்று வியக்கும் அளவுக்கு நடித்திருந்தார். இந்நிலையில் மகாநதி படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மகாநதி படத்தில் சாவித்ரி கணேசனாக நடிக்க வேண்டும் என்று நாக் அஸ்வின் கீர்த்தி சுரேஷிடம் தெரிவிக்க அவரோ என்னால் முடியாது என்று கூறியிருக்கிறார். நடிகையர் திலகமாக தன்னால் சிறப்பாக நடிக்க முடியாது என்று பயந்த கீர்த்தி அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். பின்னர் ஒரு வழியாக மகாநதி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கீர்த்தி.

முதல் முறை கேட்ட போது நடிக்க முடியாது என்று கூறிய பிறகும் தன்னை அந்த படத்தில் நாக் அஸ்வின் நடிக்க வைத்ததில் கீர்த்திக்கு சந்தோஷம். நல்ல வேளை அவர் மகாநதி படத்தில் நடிக்கவே முடியாது என்று அடம்பிடிக்காமல் இருந்தார். கீர்த்தி சுரேஷ் மட்டும் மகாநதி படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்குமா?. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.
நடிகையர் திலகமாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானதும் சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பற்றி கண்டமேனிக்கு விமர்சனம் செய்தார்கள். நடிக்கவே தெரியாமல் சிரித்து சிரித்து படங்களை ஓட்டும் கீர்த்தி சுரேஷை போய் சாவித்ரியாக நடிக்க வைப்பது மிகவும் தவறு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே தன் நடிப்பால் மிரள வைத்த சாவித்ரி எங்கே, நடிக்கவே தெரியாத கீர்த்தி எங்கே என்றெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்.

இந்த விமர்சனங்களை எல்லாம் பார்த்த கீர்த்தி என் படம் மூலம் பதில் சொல்கிறேன் என்பது போன்று அமைதியாக இருந்துவிட்டார். மகாநதி படத்தை பார்த்தவர்கள் தாங்கள் கீர்த்தி சுரேஷை அப்படி விமர்சனம் செய்தது தவறு என்பதை புரிந்து கொண்டனர்.

புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருக்கும் பெண்குயின் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் பெண்குயின் படம் வரும் 19ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. முன்னதாக வெளியான ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இது வித்தியாசமாக இருக்கிறதே, கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பெண்குயின் படத்தில் காணாமல் போன தன் மகனை தேடும் தாயாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான முதல் தமிழ் படம் ஆகும். அதையடுத்து தற்போது பெண்குயின் படம் ரிலீஸாக உள்ளது.

கீர்த்தி சுரேஷின் நடிப்பில் கடந்த ஆண்டு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் விஜய்யின் சர்கார் ஆகும். கீர்த்தி பாலிவுட் படத்தில் நடிக்க தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சியாகும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். ஆனால் அவர் உடல் எடையை குறைத்ததாலேயே அந்த பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ப்ரியாமணி அந்த படத்தில் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். கொரோனா லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்