ஆப்நகரம்

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்: அப்பாவிடம் சொன்ன சமந்தாவின் மாஜி கணவர்

தான் ரகசியமாக காதலிப்பதை அப்பா நாகர்ஜுனாவிடம் கூறியபோது அவர் என்ன சொன்னார் என்பதை தெரிவித்தார் நாக சைதன்யா.

Samayam Tamil 25 Jan 2022, 1:00 pm
தன் காதல் பற்றி அப்பா நாகர்ஜுனாவிடம் நாக சைதன்யா கூற அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட்.
Samayam Tamil when naga chaitanya talks about his secret love and nagarjunas ultimate reaction
நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்: அப்பாவிடம் சொன்ன சமந்தாவின் மாஜி கணவர்



நாக சைதன்யா

நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். காதலித்த காலத்தில் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். எத்தனை நாளைக்கு தான் காதலை மறைத்து வைப்பது என்று ஒரு நாள் தன் அப்பா நாகர்ஜுனாவிடம் சொல்ல முடிவு செய்தார் நாக சைதன்யா.

காதல்

தன் காதலை முதலில் அப்பாவிடம் தான் சொல்லியிருக்கிறார் நாக சைதன்யா. அப்பா நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று அவர் சொல்ல, அதை கேட்ட நாகர்ஜுனாவை, இப்போ தான் சொல்றியா, எனக்கு எப்பவோ தெரியுமே என்று கூறியிருக்கிறார். நாகர்ஜுனா கூறியதை கேட்டு நாக சைதன்யா அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

விவாகரத்து

ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய சமந்தா, குட் நியூஸ் சொல்வார் என்று எதிர்பார்த்த நேரத்தில் விவாகரத்து குறித்து அறிவித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

மகள்

சமந்தா எங்களுக்கு மருமகள் அல்ல மகள். அவர் எங்கள் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டாலும் என்றுமே எங்கள் மகள் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் நாகர்ஜுனா. மேலும் சமந்தாவின் சந்தோஷம் தான் தன் சந்தோஷம் என நாக சைதன்யா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்