ஆப்நகரம்

பிரியாணிக்காக பிரபாஸ் புராணம் பாடும் நடிகை ஷ்ரத்தா கபூர்!

பிரியாணி விருந்து வைத்த நாளிலிருந்து பிரபாஸ் புராணம் பாடி வருகிறார் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர்.

Samayam Tamil 28 Dec 2018, 2:39 pm
பிரபல பேட்மின்டன் வீராங்கனை, சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் சாய்னா கேரக்டரில் ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இவர் நடித்த முதல் படத்திற்கே இவருக்கு பிலிம்பேர் அவார்டு கிடைத்துள்ளது. ஆகையால் இந்தப் படத்தின் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
Samayam Tamil saaho


இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா கபூர், சமீபகாலமாக, நடிகர் பிரபாஸ் புராணம் தான் பாடுகிறார்.இருவரும் இணைந்து, ‘சாஹோ’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே, நடிகை ஷ்ரத்தாவுக்கு, தன் வீட்டில் சமைத்த ஐதராபாத் பிரியாணியை எடுத்து வந்து, பிரபாஸ் பரிமாறியுள்ளார். பிரியாணி சாப்பிட்ட நாளில் இருந்துதான், பிரபாஸ் புராணம் பாடத் துவங்கி உள்ளார், ஷ்ரத்தா கபூர்.

நடிகர் பிரபாஸ் குறித்து ஷ்ரத்தா கபூர் கூறுகையில், ‘’பெரிய நடிகர் என்ற பந்தா, கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. எல்லோரிடமும் சகஜமாக எவ்வளவு எளிமையாக பழகுகிறார். அவரைப் போன்ற ஒரு நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை,’’ என்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்